- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Psalms - Chapter 143
1 ஆண்டவரே! என்மன்றாட்டைக் கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால், உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.
2 தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்; ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும் உமது திருமுன் நீதிமான் இல்லை.
3 எதிரி என்னைத் துரத்தினான்; என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்; என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.
4 எனவே, என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று; என்உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
5 பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்; உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச் சிந்தனை செய்கின்றேன்; உம் கைவினைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
6 உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல் என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது. (சேலா)
7 ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்; ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது; என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்; இல்லையெனில், படுகுழி செல்வோருள் ஒருவராகிவிடுவேன்.
8 உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
9 ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.
10 உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் கடவுள்; உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!
11 ஆண்டவரே! உமது பெயரின் பொருட்டு என் உயிரைக் காத்தருளும்! உமது நீதியின் பொருட்டு என்னை நெருக்கடியினின்று விடுவித்தருளும்.
12 உமது பேரன்பை முன்னிட்டு என் பகைவரை அழித்துவிடும்; என் பகைவர் அனைவரையும் ஒழித்துவிடும்; ஏனெனில், நான் உமக்கே அடிமை!