Psalms - Chapter 29
Holy Bible

1 இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆம்! ஆண்டவருக்கே உரித்தாக்குங்கள்! 
2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். 
3 ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். 
4 ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. 
5 ஆண்டவரின்குரல் கேதுருமரங்களை முறிக்கின்றது; ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார். 
6 லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்; சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார். 
7 ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;
8 ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது; ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார். 
9 ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது; காடுகளை வெறுமை ஆக்குகின்றது; அவரது கோவிலில் உள்ளஅனைவரும் 'இறைவனுக்கு மாட்சி' என்று ஆர்ப்பரிக்கின்றனர். 
10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். 
11 ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக! ஆண்டவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! 

Holydivine